இராஜபாளையம்: வழிகாட்டி பலகையால் வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையடையாத நிலையில், சங்கரன்கோவில் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகை வாகன ஓட்டிகளை அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. 

திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிநடை பெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் t0 சத்திரப்பட்டி வழியே இராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி வழியாக மேம்பாலம் மூலம் இப்பாதை கடந்து செல்கிறது. இந்நிலையில் முதுகுடி முன்பு ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் பணிகள் முடிவடையாமல் உள்ள நிலையில் இராஜபாளையம் உள்ள மெயின் ரோட்டில் ஸ்ரீவில்லிபுத்துார், தென்காசி என குறியீட்டுடன் கூடியபெயர் பலகை அமைக்கப்பட்டன.

இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் வழி காட்டி பலகையைப் பார்த்து மேம்பாலத்தில் ஏறி நான்கு வழிச்சாலை மூலம் சுலபமாக கடந்து விடலாம் என செல்லும் போது நீண்ட துாரம் வரை சென்று திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே பணிகள் முடியும் வரை பெயர் பலகை குறியீட்டை மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி