சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஸினா பீவி, தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையில் தனிப்படை அமைத்து நள்ளிரவு 3 நபர்களை பிடித்து கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக சோலைராஜுக்கும் இவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாகவும் இதன் காரணமாக திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததும் தெரிய வந்தது. முத்துலிங்கம், கருப்பசாமி பாண்டி, பெருமாள்சாமி 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.