இராஜபாளையம்: அரசுப் பேருந்து மோதி முதியவர் பலி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் காத்தான், இவர் சலூன் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடையில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன் ராஜகுரு அளித்த புகாரின் அடிப்படையில், அரசு பேருந்து டிரைவரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மீது தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி