இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது..

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சிறப்பு துணை ஆய்வாளர் முருகராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதே பகுதியைச் சேர்ந்த 57 வயது கணேசன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த சேத்தூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி