இதன் மூலம் தேவதானம், நகரக்குளம், பெரியகுளம், சேத்தூர் வாழவந்தான் கண்மாய் உள்ளிட்ட பெரியகண்மாய்களும், வாண்டையார், முகவூர் குளம் உள்பட 11 கண்மாய்களும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. நீர்வரத்துக்கு ஆதாரமான சாஸ்தா கோவில் நீர்தேக்கம் கடந்த மாதம் மழையால் நிரம்பி நவ. 18 முதல் ஏழு நாட்கள் மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து 48 நாட்களுக்கு திறக்க அறிவிப்பு இருந்தும் தொடர் மழை இல்லாததால் முதலில் உள்ள கண்மாய்களுக்கு நீர் சென்று நிரம்பவில்லை.
தற்போது நெல் சாகுபடிக்கான ஒரு மாதம் தண்ணீர் தேவை உள்ள நிலையில் பாதி அளவு கூட கண்மாயில் நீர் இல்லை. மேலும் கண்மாய் பாசனத்தை நம்பி நடவு செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.