இராஜபாளையம்: ஓணம் பண்டிகை; சென்னை-கொல்லம் சிறப்பு ரயில்

விருதுநகர் மாவட்டம், ஓணம் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கொல்லத்திற்கு பிற்பகல் 3.10 மணிக்கும் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். 

இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06119) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) சென்னையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்றடையும். 

இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06120) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) கொல்லத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி