இந்நிலையில் அந்த வாகனத்தின் அருகே குவிந்துவைக்கப்பட்டிருந்த குப்பையில் அடையாளம் தெரியாத மர்மநபர் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த ஆம்புலன்ஸ் மீது தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் எரிந்து நாசமானது. இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்