சிவகாசி வழியாக தென்காசி வரை சோதனை இரயில் ஓட்டம்

விருதுநகர் மாவட்டம், நாளை (பிப். 04) காலை 7:30 மணியளவில் மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சோதனை ரயிலானது நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக தென்காசி ரயில் நிலையம் வரை அதிவேக சோதனை இரயில் ஓட்டம் (121 கிமீ) நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதில் மானாமதுரை-அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக 121 கிமீ அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் தண்டவாளம் அருகில் உள்ளவர்கள் நாளை பிப். 4 காலை 7 மணி முதல் தண்டவாளத்தை கடக்க வேண்டாமென்றும் மேலும் கவனமாக இருக்குமாறும் தெற்கு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி