மேலும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த துணிமணிகள் தரையில் சிதறி கிடந்தன. அதைப்போல் பீரோவில் வைத்திருந்த 6 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,80,000 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ராஜபாளையம் டிஎஸ்பி (போலீஸ்) ராமகிருஷ்ணன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு உள்பட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.