மேலும் தகவலின் அடிப்படையில் பனையடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் நேரில் ஆய்வு சென்று ஆய்வு செய்யப்பட்டதில் பட்டாசு ஆலை வளாகத்தின் உள்ளே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்த ஆலை உரிமையாளர் கணேசன் மற்றும் சிவகாசியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் தயார் செய்த பட்டாசுகளை பறிமுதல் செய்த ஏழாயிரம் பண்ணை போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர் கணேசன், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.