விருதுநகர்: மாற்றுத்திறனாளி வாகனத்தின் மீது கார் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் முருகதாசன். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேந்திரனுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. அதை வாங்கிவிட்டு விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹோலி க்ராஸ் மருத்துவமனை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ராஜேந்திரன் அந்த மூன்று சக்கர வாகனத்தை ஓட்டிவந்துள்ளார். அப்போது அவருடைய மகன் முருகதாசன் பின்னால் அமர்ந்திருந்தான். அந்த வாகனத்தின் மீது டெஸ்மந்த் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ராஜேந்திரனும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி