விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி வசந்த விழா விமர்சையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஐந்தாம் நாள் விழாவக, பாளையம்பட்டி கம்பவர் உறவினர் முறைப்படி மண்டபத்தை முன்னிட்டு, வேணுகோபால சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.