சாலை தடுப்பின் மீது டூ வீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்தவர் கதிர்வேல் வயது (24) இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொட்டியாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையின் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கதிர்வேல் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த கதிர்வேலின் தந்தை அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.