விருதுநகர்: மாநில அளவிலான கபடி போட்டி

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அதிமுக வழக்கறிஞர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் இளைஞரணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுஅருப்புக்கோட்டையில் முதன் முறையாக மாநில அளவிலான மூன்று நாட்கள் கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் பெண்கள் அணிக்கு தனியாகவும், ஆண்கள் அணிக்கு தனியாகவும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. 

போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கபடி அணி வீரர்கள் பங்கேற்றனர். எதிரணி வீரர்களை முட்டி தூக்கினர். ‌ இந்த போட்டிகளை பாளையம்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.51,000 ரொக்கப்பணம் மற்றும் கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.30,000 ரொக்கப்பணம் மற்றும் கோப்பை, மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.20,000 ரொக்கப்பணம் கோப்பை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இணைந்து பரிசுகள் கோப்பைகள் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி