விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், சமுதாய வளைகாப்பு என்பது அனைத்து சமூகங்களிலும் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு சம்பிரதாயம் என்று கூறினார். மேலும், ஒரு கர்ப்பிணி கூட குடும்ப சூழ்நிலையினால் சந்தோஷமான உணர்வினை அனுபவிக்க முடியாமல் போய்விடக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.