விருதுநகர்: சிறப்பான பணி.. தூய்மை பணியாளர்கள் கெளரவிப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நகராட்சி சுகாதார மையத்தில் நகர் மன்ற தலைவர் வழிகாட்டுதலின்படி நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த பொது சுகாதாரப் பிரிவு தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதோடு கேடயம் வழங்கி கௌரவித்தனர். இதில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி