அதனைத் தொடர்ந்து பக்தர்களின் பக்தி கீர்த்தனைகள் பாட ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் ஜொலித்த ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் ஆலயத்தில் 2024 தாண்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பக்தர்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டதுடன், சாய்பாபாவின் திருவடியில் வைக்கப்பட்ட நாணயங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பரத நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் அருப்புக்கோட்டை பந்தல்குடி, வாழ்வாங்கி, வெம்பூர், சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவி தொகுதி போன முறை என்னை ஏமாற்றியது - உதயநிதி