இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாளையம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் வரி உயரும் எனவும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இழக்கக்கூடும் எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இதை தடுத்து நிறுத்த முடியும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த இயக்கத்திற்கு பாளையம்பட்டி ஊராட்சி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும் பாளையம்பட்டி ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜனவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்