புலியூரான் மற்றும் இலங்கிப்பட்டியில் தலா ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு பயணிகள் நிழற்குடையும் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொய்யாங்குளம் கிராமத்தில் ரூ.16.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், தொட்டியாங்குளம் கிராமத்தில் ரூ.27.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு 61 ஆண்டுகள் சிறை