விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கில் ஜே.சி.ஐ. இயக்கத்தின் 2026 புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இயக்கத்தில் சிறப்பாக செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர். மேலும், ஏழை பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.