பந்தல்குடி: மனைவி தற்கொலை; கணவர் புகார்

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மலர்கொடி வயது 60. இவருடைய கணவர் கருப்பசாமி. மலர்கொடியின் மூத்த மகன் சரிவர் வேலைக்குச் செல்லாமல் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய கணவர் கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி