விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 25). இவர் திருமணம் முடியாமல் இருப்பதாகவும் இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிக்காமல் இருந்து வந்த அவர் தோட்டத்திற்கு சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் அங்கு சென்று பார்த்த பொழுது தண்ணீர் தொட்டியில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய ராமர் என்பவரின் தந்தை ராமசாமி அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.