விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). இவருடைய மனைவி சண்முகத்தாள். மாரியப்பன் உடல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பஜார் பகுதியில் அவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அருகில் இருப்பவர்கள் அவருடைய மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்து பார்த்த பொழுது கணவர் உயிர் இழந்தது தெரியவந்தது. இது குறித்த நடவடிக்கை எடுக்க அவருடைய மனைவி அளித்த புகார் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.