இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வான அம்மன் கருவறை கதவு தானாகத் திறக்கும் அதிசய நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கதவு சாத்தப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி கருவறையை மூன்று முறை சுற்றி வந்து கருவறை வாசல் படியில் தேங்காய் உடைத்ததும் கதவு தானாகத் திறக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆகோ அய்யாகோ கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்