இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர்கள் இரண்டு இடத்தில் உள்ளது இதுபோன்று இரண்டு இடங்களில் பெயர்கள் வருவதை நீக்க வேண்டும், வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்தவர்களின் பெயர்களை தங்களது கோப்புகளை வைத்து அதன் அடிப்படையில் நீக்க வேண்டும், இறப்புச் சான்றிதழ் வழங்கி தான் தற்போது நீக்க வேண்டி உள்ளது, ஒரு சில கிராமங்களில் வாக்குச்சாவடிகள் இல்லாமல் அருகில் உள்ள கிராமங்களுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த கிராமங்களில் வாக்காளர்கள் உள்ளனரோ அதே கிராமங்களிலேயே வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன் வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு