ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 மினி லாரிகள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆலங்குளம் - தென்காசி சாலை அடைக்கலபட்டணத்தில் ஆலங்குளம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அங்கு வந்த 2 மினி லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது, அதில் 13 மூட்டைகள் புகையிலை, 4 மூட்டைகள் கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், புகையிலைப் பொருட்களை கொண்டு வந்தவர்கள் கீழப்பாவூர் பூமாடன் மகன் முருகன்(33), அவரது சகோதரர் செல்வன் (28), அயன் குறும்பலாப்பேரி குத்தாலிங்கம் மகன் ரத்தினசாமி என்ற மகேஷ் (28), அதே பகுதி இசக்கிமுத்து மகன் நவீன்குமார்(23) ஆகியோர் என்பதும் கேரளத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. 

அவர்களை கைது செய்த ஆலங்குளம் போலீசார், அவர்களிடமிருந்து 2 மினி லாரிகள், 2 பைக்குகள் மற்றும் சுமார் 250 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தொடர்புடைய செய்தி