தொல்லியல் கண்காட்சியை திறந்து வைத்த விழுப்புரம் எம்பி

விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ‘ முனைவர் தொல். திருமாவளவன் அறக்கட்டளை‘ சார்பில் நேற்று தொல்லியல் கண்காட்சியை விழுப்புரம் எம்பி ரவிக்குமார் துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் மேனாள் துணை இயக்குநர் தகி. ஶ்ரீதரன் ‘ அகழ்வாய்வுகள் காட்டும் தமிழக வரலாறு’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :