விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரசன்குப்பத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (32). இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த நபர், சிவசக்தி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.