அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?

அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 30 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சீரமைக்கப்பட்டாலும், பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் இயங்கும் உள்ளூர் கிரிக்கெட் ஆர்வலர்களின் ஆதரவுடன், பேரூராட்சி நிர்வாகமும் விளையாடுவதற்கு தேவையான நிலப்பரப்பை அவ்வப்போது ஜே. சி. பி. , மூலம் சீரமைத்து தருகிறது. உள்ளூர் கிரிக்கெட் கிளப் சார்பில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வந்து விளையாடுகின்றனர். மாதம்தோறும் டோர்னமென்ட் போட்டிகளும் நடத்தப்படுகிறது. ஆனால், மைதானத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், தொகுதி விளையாட்டு அரங்கம் அமைக்கும் அரசின் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தொகுதி விளையாட்டு அரங்கம் அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி