விழுப்புரத்தில் கணவருடன் சண்டை; மனைவி, மகள் மாயம்

விழுப்புரம் அடுத்த காகுப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (41); இவருக்கும், அவரது மனைவி சத்யா (30) என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு, தனது மகள் ஜகதல பிரதாப தேவி (1)என்பவருடன் சத்யா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி