இந்நிலையில், நேற்று காலை கோலியனூர் கூட்டரோடு அடுத்த தோப்புகாலனி சுடுகாடு பகுதியில் உள்ள வேப்பமரத்தில், கயிறால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் இருந்தன. மேலும், அவரது பெற்றோர் வந்து பார்த்து, தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மோப்ப நாய் ராக்கி உதவியுடன் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார், சந்தேக மரணம் வழக்கு பதிந்து, துரைராஜ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது