விழுப்புரம்: மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகன்

விழுப்புரம் மாவட்டம் பாவந்தூரில், மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், தகராறில் மனைவியின் தாய் தனலட்சுமியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி மீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனலட்சுமியின் மகன் அளித்த புகாரின் பேரில், சிவா என்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் பழக்கடையில் வேலை செய்யும் சிவா, சொந்த ஊரான விழுப்புரம் வந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி