இச்சாலையில் மருத்துவமனை, வணிக வளாகங்கள், பள்ளி உள்ளிட்டவை உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும் உள்ளது. மழைநீருடன், கடைகளில் இருந்து வரும் கழிவுநீரும் சேர்ந்து விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு நோய் பரவும் அபாயநிலையும் உள்ளது. மழைநீரில் வாகனங்களை ஓட்டி செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி உள்ள கால்வாய்களை கண்டறிந்து, துார்வாரி மழைநீர் வெளியேற நிரந்தர நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?