தென்கோடிப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர் ஆண்டாள் அணிந்திருந்த நகை மற்றும் பணம் கொடுத்தால், உடனடியாகச் சென்று இஸ்திரி பெட்டி வாங்கி வருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஆண்டாள், தான் அணிந்திருந்த நான்கு கிராம் கம்மல், இரண்டு கிராம் மூக்குத்தி மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு அந்த நபர் பைக்கில் மாயமாகி விட்டார். வெகு நேரமாக அந்த மர்ம நபர் வராததால், தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டாள் புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை