விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மயிலம் சாலையில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் போலீசார் நேற்று (ஜூன் 13) மாலை ரோந்து சென்றனர். அப்போது, திண்டிவனம் கிடங்கல் சதீஷ் (42); ஏழுமலை (60); ராஜா (45) ஆகியோர் கேரளாவின் 3 நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் மூவரையும் பிடித்து அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள், 1,780 ரூபாயை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.