திண்டிவனம்: அரசு டாக்டரிடம் தகராறு.. திமுக பிரமுகர் மீது புகார்

திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவர் அரசு மருத்துவர் சுரேஷ்குமார் (37). நேற்று முன்தினம் (டிசம்பர் 31) ஒரு நாள் மட்டும் வானூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த வானூர் அடுத்த ஏறையூரைச் சேர்ந்த தி.மு.க. கிளை செயலர் ரவிச்சந்திரன் (40) ஒருவரின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதற்கு டாக்டர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர் சுரேஷ்குமார் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, டாக்டர் சுரேஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் தி.மு.க. பிரமுகர் ரவிச்சந்திரனும், டாக்டர் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து, வானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி