பல மாதங்களுக்குப் பிறகு, ரயில்வே மேம்பாலத்தின் தெற்குப் பகுதி சாலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் போக்குவரத்து துவங்கியது. பாலத்தின் வடக்குப் பகுதி சாலை பணிகள் நிறைவடைந்து டிசம்பர் மாதம் போக்குவரத்து துவங்கும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இரண்டு மாதங்களாக வடக்குப் பகுதி சாலையில் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்திற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலை பயன்பாட்டிற்கு வரும் முன் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக சாலையைச் சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, விரிசல் ஏற்பட்ட பகுதியில் 1 மீட்டர் அகலம், 1 அடி ஆழம் அளவிற்கு சிமென்ட் சாலையைத் தோண்டியெடுக்கப்பட்டது. சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழுப்புரம் - நாகை நான்குவழிச் சாலையில் திருவாண்டார்கோயில், மதகடிப்பட்டு மற்றும் விழுப்புரம் அருகே மேம்பாலங்களில் விரிசலை அடைத்து பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.