விழுப்புரம்: கார் மோதி 4 பேர் காயம்

விழுப்புரம் அருகே உள்ள மழவராயனூரில் வசித்து வருபவர் ரமேஷ் மகன் தேவா (வயது 19). இவரும், அவரது அக்காள் ரமா (21) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ரமேஷ் (66), அவரது உறவினர் மணி (36) ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் மடுகரையில் இருந்து சிறுவந்தாடு நோக்கி புறப்பட்டனர். 

சிறுவந்தாடு - மடுகரை சாலையில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பு அருகே சென்றபோது எதிரே வந்த கார் 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் காயம் அடைந்த தேவா உள்ளிட்ட 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி