திருக்கோவிலூர்: பகுதியில் டி ஐ ஜி திடீர் ஆய்வு

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் நேற்று மாலை வீரபாண்டி, ஆதிச்சனூர் சாலையில், ஏரிக்கரை மற்றும் புதர் மண்டிய பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் விதமாக அதிரடி சோதனை நடத்தினார். 

இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்த டி.ஐ.ஜி., யாராவது சாராயம் காய்ச்சினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி