திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் புதைகுழியில் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தேவனுார் பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன் 13) மாலை 5:00 மணியளவில் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, ஆற்றின் கரையோரத்தில் இருந்த 5 அடி ஆழப் புதைகுழியில் விழுந்தது. மாட்டின் கழுத்து மட்டுமே வெளியில் தெரிந்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையச் சிறப்பு நிலைய அலுவலர் வினாயகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணிநேரம் போராடி 6:00 மணிக்குப் பசுவை உயிருடன் மீட்டனர்.