விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் மகன் வெங்கடேசன் (15) 10ம் வகுப்பு படித்து வருகின்றார். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த ஜங்ஷன் பாக்ஸில் ஏதோ கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை வெங்கடேசன் சரி செய்ய முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இன்று (மார்ச் 15) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். இது குறித்து அறகண்டநல்லூர் போலீஸ் தான் விசாரணை நடத்தி வருகின்றனர்.