சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மணலுார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மகன் ஹரி, 21; பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது.
இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஹரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.