பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

திருக்கோவிலுார் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இப்பள்ளியில், புதிதாக பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இதற் கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளர் தனலட்சுமி பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக நீலாவதி, துணைத் தலைவராக சங்கீதா தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.


ஆசிரியர் பிரதிநிதிகளாக நெடுஞ்செழியன், நாகமணி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக புவனேஸ்வரி, துரைராஜன் தேர்ந்தெடு கப்பட்டனர். கல்வியாளர்கள் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டனர்.