முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை எனக்கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.