விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சாரணியர் சங்கம் துவக்க விழா நடந்தது. பள்ளியில் நடந்த விழாவிற்கு திண்டிவனம் வட்ட சாரண-சாரணியர் சங்கத்தின் பொருளாளர் கோபு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட கவர்னர் கல்யாணி, செயலாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினர். பள்ளியின் தாளாளர் முரளிதரகுராமன் முன்னிலையில் நடந்த விழாவில், பள்ளியின் முதல்வர் சுரேந்திரன் வரவேற்றார். தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள் அரவிந்த், தமிழரசி, காவேரி, சக்திலட்சுமி ஆகியோர் சாரண, சாரணிய சங்கத்தின் கேப்டன்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.