புதுச்சேரி: திருமண வரவேற்பில் மொய்ப்பணம் திருட்டு

புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காரில் வைத்திருந்த ரூ. 5.50 லட்சம் பணம் திருடுபோன சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டெல்லி கணேஷ் ஈடுபட்டது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை திண்டிவனத்தில் பதுங்கியிருந்த அவனைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி