இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஏழுமலை, கிளியனூர் அடுத்த எறையானூரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து தனது குழந்தைகளை அழைத்து வர சென்றார். அப்போது, அங்கு வந்த சுரேஷிற்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் ஏழுமலை மார்பில் வெட்டினார். படுகாயமடைந்த ஏழுமலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை தேடிவருகின்றனர்.