தற்போது இந்த குப்பை யார்டில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக மைக்ரோ கம்போசிங் மையம் கட்டம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் நகர பகுதிகளில் நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை.
இதனால் நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் யார்டிற்கு கொண்டு போகாமல், திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை, புதிய பஸ் நிலையம் வர உள்ள இடத்திற்கு அருகே இருக்கும் ஏரி, கர்ணாவூர் சுடுகாடு பகுதி, திண்டிவனம் - மயிலம் ரோட்டில் உள்ள புறவழிச்சாலையின் இரண்டு பக்கம் என கண்ட இடங்களில் குப்பைகளை மலை போல் கொட்டி வருகின்றனர். இதனால் நோய் தொற்று வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.