அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திமுகவின் ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திமுக கை வைத்த இடமெல்லாம் ஊழல், கொலை, கொள்ளை நடப்பதாக அவர் கூறினார். மக்கள் எதையும் கவனிக்கவில்லை என திமுக நினைப்பதாகவும், ஆனால் களம் அதிமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.