விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கள்ளக்கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் (56) என்பவர், தனது மகன் திவாகருடன் (27) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த அதிவேக கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். திவாகர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.